சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

  • January 31, 2023 / 05:58 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த் . இவர் 80-களில் வளர்ந்து வரும் மாஸ் ஹீரோவாக இருந்தார் . அந்த காலகட்டத்தில் ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டில் துருதுருவென பயங்கர கலாட்டாக்கள் செய்வாராம்.

அப்போது நடிகர் சத்யராஜும் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக இருந்தார் . இவர்கள் இரண்டு பெறும் தம்பிக்கு எந்த ஊரு என்ற படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் . இதில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக மாதவி நடித்து இருந்தார் . அந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை மாதவியிடம் ரஜினி கிண்டலாக சத்யராஜ் ஒரு நடிப்பு இன்ஸ்டூட் ப்ரொபசர் அவர் நன்றாக நடிப்பு கற்றுத் தருவார் என்று கூறியுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி நடிகை மாதவி சத்யராஜிடம் ஆங்கிலத்தில் பேசி உள்ளார் . நடிப்பு சொல்லித்தருவதை பற்றி கேட்டுள்ளார் ஆனால் மாதவி பேசுவதை பற்றி ஒன்றும் அறியாத சத்யராஜ் முழித்துக்கொண்டு நின்றுள்ளார் அப்போது அந்த படத்தின் இன்னொரு நாயகி சுலோக்சனா நடிகை மாதவியிடம் சத்யராஜ் நடிப்பு இன்ஸ்டூட் ப்ரொபசர் இல்லை , அது ரஜினி சார் விளையாட்டாக அதை கூறினார் என்று கூறியுள்ளார் .

இந்த சம்பவம் சத்யராஜ் மனதில் ரஜினி மீது சற்று வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது . இங்கு தான் ரஜினிக்கும் சத்யராஜுக்கு ஈகோ பிரச்சனை தொடங்கி உள்ளது . இதன் பிறகு பல படங்களில் இவர்கள் சேர்ந்து நடித்து இருந்தாலும் இவர்களது ஈகோ பிரச்சனை இன்னும் ஓயவில்லை என்று தான் கூறவேண்டும் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus