ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படத்தை பார்த்துட்டு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

  • October 27, 2022 / 01:15 PM IST

கன்னட சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி, நடித்திருக்கும் புதிய படமான ‘காந்தாரா’ கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னட மொழியில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் சப்தமி கௌடா, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இதற்கு அர்விந்த்.எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்து ரசித்த கோலிவுட்டின் முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ட்விட்டரில் “காந்தாரா இந்திய சினிமாவின் மாஸ்டர்பீஸ்” என்று குறிப்பிட்டு, இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டியையும், படக்குழுவினரையும் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus