குடித்துவிட்டு ரகளை… ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் வில்லன் விநாயகன் கைது!

  • October 24, 2023 / 11:24 PM IST

மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் ‘திமிரு’ படத்தின் மூலம் அறிமுகமானார். விஷால் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு பிறகு விநாயகன் தமிழில் ‘சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், காளை, சிறுத்தை, மரியான்’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில், வெளியாகி மெகா ஹிட்டான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் மெயின் வில்லனே விநாயகன் தான்.

இதில் ‘வர்மன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது இவர் கைவசம் தமிழில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் மட்டும் இருக்கிறது. இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில், இன்று விநாயகன் தான் எர்ணாகுளத்தில் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் குடித்து விட்டு ரகளை செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கும் அவர் ஓவராக கத்தி பேசி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின், போலீசார் விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus