உருக்கமாக பதிவிட்ட ரகுல் ! என்ன காரணம் தெரியுமா ?

  • December 28, 2022 / 03:29 PM IST

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங் . ஹிந்தி , தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் பணியாற்றி வரும் ரகுல் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . தான் வளர்த்த செல்ல நாயின் மறைவு இதற்கு காரணம் .

ரகுல் ப்ரீத் சிங் தான் வளர்த்து வந்த நாய் மரணமடைந்துவிட்டதாக தெறிவித்திருக்கிறார். அதனுடன் உருக்கமான பதிவு ஒன்றை எழுதி இருக்கும் அவர் தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில்,”16 வருடங்களுக்கு முன் எங்கள் வாழ்வில் வந்து எங்களை மிகவும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் மலரச் செய்தாய்.. நான் உன்னுடன் வளர்ந்தேன்..

நாங்கள் உன்னை மிகவும் மிஸ் செய்வோம்.. நீ நன்றாக வாழ்ந்தாய். நீங்கள் கஷ்டப்படாமல் இருந்ததில் மகிழ்ச்சி. உன்னுடைய ஆன்மா சாந்தியடையட்டும் போஷி. எங்கிருந்தாலும் நீ மகிழ்ச்சியாக இரு” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus