தாத்தா ஆகும் சீரஞ்சீவி ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

  • December 13, 2022 / 01:38 AM IST

நடிகர் ராம் சரண் மற்றும் மனைவி உபாசனா காமினேனி தங்களின் முதல் குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்து இருக்கின்றனர் . ராம் சரணின் இன்ஸ்டாகிராமில் : “ஸ்ரீ ஹனுமான்ஜியின் ஆசியுடன், தங்களது முதல் குழந்தையை பற்றின செய்தியை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார் . மேலும் இந்த அறிவிப்பு போஸ்டரில் ராம் சரணின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடேலா மற்றும் உபாசனாவின் பெற்றோர்களான ஷோபனா மற்றும் அனில் காமினேனி ஆகியோர் “அன்புடனும் நன்றியுடனும்” என்ற வாசகம் எழுத்து இருக்கிறது . 37 வயதான ராம் சரண் மற்றும் 33 வயதான உபாசனா காமினேனி ஆகியோர் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

ராம் சரண் தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான ககுடும்பத்தை சார்ந்தவர் . அவர் தெலுங்கு லெஜண்ட் சிரஞ்சீவியின் மகன், அல்லு அரவிந்தின் மருமகன் மற்றும் அல்லு அர்ஜுனின் உறவினர். ராம் சரண் 2007 ஆம் ஆண்டு சிருதா திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் அவரது நடிப்பில் மகதீரா, நாயக், எவடு, துருவா, ரங்கஸ்தலம் உட்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் . இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது ,

இந்நிலையில் ராம் சரண் தனது குழந்தை பற்றின அறிவிப்பை தெரிவித்த பின்பு அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus