விஜயகாந்தை பார்த்து பயந்த ரம்பா ! என்ன காரணம் தெரியுமா ?

  • January 19, 2023 / 09:31 AM IST

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோருடன் நடித்துள்ளார். 2010 இல், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை மணந்தார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் நடிப்பது இல்லை .

இந்நிலையில் நடிகை ரம்பா கேப்டன் விஜயகாந்த் பற்றி சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து உள்ளார் .அதில் ” தர்மச்சக்கரம் என்ற படத்தில் கேப்டன் அவர்களுடன் நடித்தேன் . படப்பிடிப்பின் போது பொதுவாக காலை 6 அல்லது 7 மணிக்குத்தான் படப்பிடிப்பை நடத்துவார்களாம். ஒரு சமயம் விஜயகாந்த் ரம்பாவிடம் எத்தனை மணிக்கு சூட்டிங் வருவாய் என்று கேட்டாராம். அதற்கு ரம்பா 7 மணிக்குத்தானே என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கேப்டனோ நான் 4.30மணிக்கு எல்லாம் வந்து விடுவேன், நீ அதே போல் வரமுடியுமா? என்று கேட்டுள்ளார் .

இதற்கு பதில் அளித்த நடிகை ரம்பா ரம்பா 6,7 மணிக்கு தானே சூட்டிங், அதுக்கு எதுக்கு 4.30மணிக்கு என்று நினைத்துக் கொண்டு மறு நாள் போயிருக்கிறார். சொன்னபடி விஜயகாந்த் 4.30மணிக்கு எல்லாம் வந்து உட்காந்திருக்கிறாராம். இதை பற்றி கூறிய ரம்பா நேரம் விஷயத்துல தான் விஜயகாந்தை நினைத்தால் எனக்கு கொஞ்சம் பயம் என்று கூறியிருந்தார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus