அவர்களை நான் கண்டுக்கொள்வதில்லை ! – ராஷ்மிகா மந்தனா

  • December 12, 2022 / 04:03 PM IST

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் சுல்தான் படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.

சமீபத்தில் இந்திய அளவில் வெற்றி அடைந்த ‘காந்தாரா’ திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியதும் இவர் மீது கன்னட சினிமாவில் வெறுப்புணர்வு உண்டாக காரணமாக அமைந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது ” காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளேன். படம் வெளியான சமயத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் பார்க்கவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வாரிசு மற்றும் புஷ்பா படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus