சுல்தான் படம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா!

  • October 8, 2020 / 08:30 PM IST

2014 ஆம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஷ்மிகா மந்தனா.

2012ஆம் ஆண்டு மாடலிங் துறையில் கால் பதித்த இவர், கன்னட படத்தில் அறிமுகமாகி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். “கீதா கோவிந்தம்” மற்றும் “டியர் காம்ரேட்” படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இந்த அழகுப் பதுமை, எந்த நேர்காணலில் பேசினாலும் கூட அந்த வீடியோ இணையதளத்தில் வெகுவிரைவில் வைரலாகி விடும். அவ்வளவு க்யூட் என்று ரசிகர்களால் ரசிக்கப்படும் இந்த நடிகை தற்போது தனது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது ராஷிகா மந்தனா பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகவிருக்கும் “சுல்தான்” படத்தில் நடித்து வந்தார். இது அவருக்கு தமிழில் முதல் படம் ஆகும்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் சுல்தான் திரைப்படம் விரைவில் வெளியிடப்பட்டு ரசிகர்களை ஈர்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து அனைவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus