சமந்தா அக்கினேனியின் சவாலை ஏற்றுக்கொண்ட ராஷ்மிகா!

  • July 16, 2020 / 04:53 PM IST

2014 ஆம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஷ்மிகா மந்தனா.

2012ஆம் ஆண்டு மாடலிங் துறையில் கால் பதித்த இவர், கன்னட படத்தில் அறிமுகமாகி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். “கீதா கோவிந்தம்” மற்றும் “டியர் காம்ரேட்” படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இந்த அழகுப் பதுமை, எந்த நேர்காணலில் பேசினாலும் கூட அந்த வீடியோ இணையதளத்தில் வெகுவிரைவில் வைரலாகி விடும். அவ்வளவு க்யூட் என்று ரசிகர்களால் ரசிக்கப்படும் இந்த நடிகை தற்போது தனது சமூக வலைத்தளபக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் இவர் செடிகளை நடுவது போன்று போஸ் கொடுத்து, சமந்த அக்கினேனி உங்கள் சவாலை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகை சமந்தா அக்கினேனி தனது மாமனார் நாகார்ஜூனாவுடன் இணைந்து செடிகளை நடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, இதேபோன்று செய்வதற்கு ராஷ்மிகாவை நாமினேட் செய்திருந்தார். அதை தற்போது ஏற்றுள்ள ராஷிகா மந்தனா, ராஷி கண்ணா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகிய மூவரையும் நாமினேட் செய்துள்ளார்‌.

இவ்வாறு இந்த லாக்டோனில் நடிகைகள் மரங்களை நடுவதில் ஆர்வம் காட்டுவது வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.

தற்போது ராஷிகா மந்தனா பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகவிருக்கும் “சுல்தான்” படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் “புஷ்பா” படத்தில் நடித்து வருகிறார். மேலும் கன்னட படமான “போகாரு”விலும் நடிக்கிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து தென்னிந்தியாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus