நடிகை பவுலின் ஜெஸிகா வீட்டில் சடலமாக மீட்பு… தற்கொலைக்கான காரணம் என்ன தெரியுமா?

  • September 19, 2022 / 03:58 PM IST

தமிழில் இந்த ஆண்டு (2022) மே 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாய்தா’. இந்த படத்தை இயக்குநர் மகிவர்மன் CS இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக தீபா என்கிற பவுலின் ஜெஸிகா நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, முத்து அழகர்சாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் நடிகை பவுலின் ஜெஸிகா (வயது 29) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பவுலின் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலம் காதல் தோல்வியால் தான் அவர் இம்முடிவை எடுத்தார் என்று தெரியவந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus