ஐஸ்வர்யா ராய் வந்தால் நானும் வருவேன் !

  • July 13, 2022 / 08:18 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்தின் விளம்பர படுத்தும் பணிகளை துவங்கி உள்ளது அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ,கார்த்தி , ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய் , த்ரிஷா ஆகியோரின் ஸ்டில்ஸை வெளியீட்டு இருந்தனர் . அதன் பின்பு இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது . இந்த விழாவில் கார்த்தி , ஜெயம் ரவி , திரிஷா , சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர் . ஆனால் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பார்த்திபன் இந்த விழாவில் பங்கேற்கவில்லை .

சமீபத்தில் இது பற்றி பத்திரிகையாளர்கள் பார்த்திபனிடம் கேட்ட பொழுது ஐஸ்வர்யா ராய் வரவில்லை அதனால் நானும் வரவில்லை என்று நகைச்சுவையாக கூறினார் .பிறகு இரவின் நிழல் படத்தின் வேலை காரணமாக அதில் பங்கேற்க முடியவில்லை என்று உண்மையான காரணத்தை கூறினார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus