வரலக்ஷ்மியை காதலித்து வந்த பிரபல ஹீரோ… இவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

  • February 10, 2022 / 11:37 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.

அது தான் ‘போடா போடி’. அந்த படத்துக்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி’ என படங்கள் குவிந்தது. வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் நான்கு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

பல வருடங்களாகவே நடிகை வரலக்ஷ்மியும், பிரபல நடிகர் விஷாலும் காதலித்து வந்தார்கள். ஆனால், வரலக்ஷ்மியின் அப்பாவும், பிரபல நடிகருமான சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நடிகர் சங்கத்தால் மிகப் பெரிய பிரச்சனை வெடித்தது. இதனைத் தொடர்ந்து சரத்குமார் சொன்னதை கேட்டு வரலக்ஷ்மி விஷாலின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus