எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • December 20, 2022 / 12:18 AM IST

கோலிவுட்டில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் ஹீரோயின் லைலாவுக்கு தங்கையாக நடித்திருந்தார் ரெஜினா. இது தான் ரெஜினா நடிகையாக அறிமுகமான முதல் படமாம். அதன் பிறகு ‘அழகிய அசுரா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக வலம் வந்தார் ரெஜினா.

2013-ஆம் ஆண்டு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா. அப்படத்தில் ரெஜினாவின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ரெஜினாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் ‘ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், MR. சந்திரமௌலி, சிலுக்குவார்பட்டி சிங்கம், சக்ரா, நெஞ்சம் மறப்பதில்லை, கசட தபற, முகிழ்’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இதனை இயக்கியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோலில் நந்திதா ஸ்வேதா நடித்திருந்தார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக நடிகை ரெஜினா ரூ.20 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus