மெகா ஹிட்டான ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’… இதன் பார்ட் 2-வின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

  • August 21, 2023 / 05:11 PM IST

கன்னட சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி, நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னட மொழியில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் சப்தமி கௌடா, கிஷோர், அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்த இதற்கு அர்விந்த்.எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படம் கன்னட ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, இந்த படத்தின் ப்ரீக்குவலாக பார்ட் 2 ரெடியாகவுள்ளதாகவும், இதற்கான ஷூட்டிங் வருகிற நவம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு (2024) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus