ரித்திகா சிங்கின் கால்ஷீட் டைரியில் இணைந்த விஜய் படம்!

  • July 24, 2020 / 09:44 PM IST

2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான படம் ‘இறுதிச்சுற்று’. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்திருந்தார். ரியல் லைஃபில் கிக் பாக்ஸரான ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ படத்திலும் பாக்ஸராக வலம் வந்திருந்தார்.

‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார் ரித்திகா சிங். இவர் தமிழ், ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே, ரித்திகா சிங் நடிப்பில் ‘பாக்ஸர்’ மற்றும் ‘வணங்காமுடி’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. தற்போது, ரித்திகா சிங்கின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய தமிழ் படம் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளாராம். இப்படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குநர் பாலாஜி.கே.குமார் இயக்கவிருக்கிறாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus