மாலத்தீவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரித்து வர்மா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • March 11, 2023 / 03:06 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரித்து வர்மா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படத்தின் ஹீரோவே ஜூனியர் என்.டி.ஆர் தான். அப்படத்தின் பெயர் ‘பாட்ஷா’, அதில் ‘பிங்கி’ என்ற ரோலில் நடித்திருந்தார் ரித்து வர்மா.

அதன் பிறகு ‘பிரேம இஷ்க் காதல், எவடே சுப்பிரமணியம்’ போன்ற தெலுங்கு படங்களில் நடித்தாலும், ‘பெல்லி சூப்புலு’ (தெலுங்கு) என்ற படத்தில் தான் ஹீரோயினாக வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் ரித்து வர்மா.

‘பெல்லி சூப்புலு’ படத்துக்கு பிறகு நடிகை ரித்து வர்மாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கில் ‘கேஷவா’, தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புதுக் காலை, தீனி, கணம், நித்தம் ஒரு வானம்’ என படங்கள் குவிந்தது.

இப்போது ரித்து வர்மாவின் கைவசம் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ (தமிழ்) படம் மட்டும் இருக்கிறது. இந்நிலையில், நேற்று (மார்ச் 10-ஆம் தேதி) இவருக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, மாலத்தீவில் வைத்து ரித்து வர்மா தனது பிறந்தநாளை கொண்டாடியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus