சுஷாந்த் சிங் வழக்கில் கைதான ரியாவின் வாக்குமூலத்தால் பரபரப்பு!

  • September 12, 2020 / 02:17 PM IST

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் 40 பேரிடம் தற்போது வரை விசாரணை நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி தான் சுஷாந்தின் மன அழுத்தத்திற்கும் தற்கொலைக்கும் காரணம் என்றும், அவர் சுஷாந்திடம் பணம் கையாடல் செய்துள்ளதாகவும் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த சந்தேகத்தை உறுதி செய்வதற்கு ஆதாரமாக சுஷாந்தின் அக்கவுண்ட்டிலிருந்து அவர் இறப்பதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன் பணம் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் அக்கவுண்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி தெரிவித்துள்ளது.

சுஷாந்த் சிங் மன அழுத்தத்தில் இருந்த பொழுது அவருக்கு மேலும் கஷ்டம் கொடுத்து, மேலும் ஒரு கட்டத்தில் மிரட்டி சுஷாந்தின் உடைமைகளை கைப்பற்றியும் சென்றுள்ளாராம் ரியாசக்கரவர்த்தி.

இந்த வழக்கில் கைதான ரியா சக்கரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு சட்டம் ரீதியிலும் வழக்கு பதியப்பட்டது. இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ள ரியா சக்கரவர்த்தி, பிரபல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என சினிமா துறையை சார்ந்த பல முன்னணி பிரபலங்களுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறியுள்ளாராம்.

தற்போது இந்தப் பட்டியலில் நீண்டுள்ள பிரபலங்கள் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இந்த வாக்குமூலத்தில் அவர் சாரா அலி கான், ரகுல் பிரீத் சிங், பேஷன் டிசைனர் சிம்மோன் மற்றும் 25க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு இந்த போதைப் பொருள் விற்பனையில் தொடர்பிருப்பதாக கூறியுள்ளாராம். இது பாலிவுட் திரைப்பட வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus