சுவாரசியமான கேள்வி மூலம் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த “மூக்குத்தி அம்மன்”

  • October 29, 2020 / 12:32 AM IST

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.

ஒவ்வொரு படியிலும் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள இவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அந்த சவால்களை தாண்டி தற்போது வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற தீபாவளியன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று திரைப்படக் குழு தற்போது அறிவித்துள்ளது.‌

இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் புரோடக்சன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியுடன் ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் மாஸ் காட்டும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லர் மூலம் பக்தி மற்றும் அரசியல் கலந்த கதையை நகைச்சுவையான எடுத்துக் கூறியுள்ளார்கள் என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி புது முயற்சியாக “மூக்குத்தி அம்மன் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?” என்ற கேள்வி மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus