ஒ.டி.டியில் மீண்டும் ஒரு சாதனை செய்த ராஜமௌலி திரைப்படம்

  • June 1, 2022 / 04:02 PM IST

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 02 ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான படம் ரத்தம் ,ரணம் ,ரௌத்திரம் . இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் , ராம்சரண் , சமுத்திரக்கனி , அஜய் தேவ்கன் , ஆலியா , ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . தமிழ் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .குறிப்பாக வசூலிலும் இந்த படம் பல சாதனைகளை செய்துள்ளது .

இந்நிலையில் இந்த படம் வெளியான 45 நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் ஓடிடியில் மே 20-ஆம் தேதி வெளியானது தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

ஆங்கிலம் அல்லாத பிறப்மொழிப் படங்களில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக மணி நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படம் 1 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரம் மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus