இசையமைப்பில் சாம்.சி.எஸ் செய்துள்ள புதிய முயற்சி!

  • October 7, 2020 / 07:44 PM IST

நடிகர் மாதவன் “ராக்கெட்ரி – த நம்பி எஃபெக்ட்” என்ற படத்தை தானே எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இந்த படம் இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது.

தற்போது மாதவன் நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மீதமுள்ள வேலைகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“ராக்கெட்ரி – த நம்பி எஃபெக்ட்” எனும் திரைப்படம் ISROவை சேர்ந்த முன்னாள் இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள கதையை கொண்டுள்ளதாம். இந்தப் படத்தில் நடிகர் மாதவனோடு சிம்ரன் மற்றும் ரவி ராகவேந்திரன் நடிக்கிறார்கள். நடிகர் சூர்யா இந்தப் படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருகிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பிரின்ஸ்டன், ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளதாம்.

தற்போது இந்த படத்தின் இசையில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் 100 கருவிகளைக் கொண்டு இசையமைத்து புது முயற்சி ஒன்றை செய்து இந்த படத்திற்கு மேலும் மெருகேற்றி உள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus