“திருமண வாழ்க்கை ‘K3G’ படம் மாதிரி இருக்கும்னு நினைச்சேன்”… ‘காபி வித் கரன்’ நிகழ்ச்சியில் விவாகரத்து குறித்து பேசிய சமந்தா!

  • July 4, 2022 / 07:02 PM IST

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன், தெறி, சூப்பர் டீலக்ஸ், காத்து வாக்குல ரெண்டு காதல்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், சமந்தா ‘காபி வித் கரன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் சமந்தாவிடம் பாலிவுட் இயக்குநர் திருமண வாழ்க்கை குறித்து ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு சமந்தா “திருமண வாழ்க்கை பல பேருக்கு ஹேப்பியாக இல்லாமல் போவதற்கு நீங்கள் தான் காரணம். நீங்க இயக்கிய ‘கபி குஷி கபி கம்’ படத்தில் வாழ்க்கை அந்த மாதிரி தான் இருக்கும்னு காட்டியிருந்தீங்க. ஆனா, உண்மை என்னன்னா நம்ம வாழ்க்கை ‘KGF’ படம் மாதிரி தான் இருக்கு” என்று கூறியிருக்கிறார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus