“என்னுடைய விவாகரத்து எனக்கு மிகுந்த வலியை தந்திருக்கிறது”… சமந்தா வெளியிட்ட அறிக்கை!

  • October 8, 2021 / 10:31 PM IST

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. தற்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், இன்று நடிகை சமந்தா ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனக்கு எதிராக பரவிய வதந்திகளை நம்பாமல் எனக்கு ஆதரவாக என் மீது கருணை காட்டிய அனைவருக்கும் நன்றி. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பதால் என்னுடைய கருவை கலைத்தேன் என்றும் பலர் வதந்திகளை பரப்பினார்கள். என்னுடைய விவாகரத்து எனக்கு மிகுந்த வலியை தந்திருக்கிறது. இதிலிருந்து வெளியே வர எனக்கு அவகாசம் கொடுங்கள். என் மீதான தனிப்பட்ட தாக்குதல் கண்டிப்பாக தொடரும் என்று நினைக்கிறேன். இருப்பினும் நான் இதனால் உடைந்து விட மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus