விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு… வருத்தத்தில் நடிகர் நாகசைத்தன்யா!

  • March 22, 2022 / 05:50 PM IST

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமீபத்தில், சமந்தா 2022-ஆம் ஆண்டில் இந்த விஷயம்லாம் செய்யணும் என்று குறிப்பிட்டு ஒரு பட்டியலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார், அந்த பட்டியலில் “நமது வாழ்க்கைத் துணையை மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

ஏனெனில், இந்த ஒரு முடிவில் தான் நம்ம வாழ்க்கையே மாறும். நம்ம வாழ்க்கைல 90% சந்தோஷமாக இருக்கப்போறமா? இல்ல கஷ்டப்படப்போறமா? என்பதை இந்த முடிவு தான் தீர்மானிக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைத்தன்யாவுடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸ் மற்றும் விவாகரத்து குறித்த பதிவையும் நீக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமில் நாகசைத்தன்யாவை UNFOLLOW செய்துள்ளாராம் சமந்தா.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus