விஜய் படத்தில் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

  • January 25, 2022 / 06:12 PM IST

தெலுங்கு திரையுலகில் ‘ஏ மாயா சேசவே’ என்ற திரைப்படம் 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக நாகசைத்தன்யா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் சமந்தா அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம். இப்படத்தில் சமந்தா ‘ஜெஸ்ஸி’ என்ற கேரக்டராக வலம் வந்திருந்தார். இதில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்த்து விட்டது.

இது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (தமிழ்) படத்தின் தெலுங்கு வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் வெர்ஷனில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் திரையுலகில் ‘பாணா காத்தாடி’ மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்த சமந்தா ‘மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்க மகன்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாஸ் காட்டும் சமந்தாவிற்கு, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்போது சமந்தா நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் ‘ஓ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா நடமாடியிருந்தார். தற்போது, விஜய் தேவாரகொண்டா – பூரி ஜெகன்நாத் காம்போவில் உருவாகி வரும் ‘லைகர்’ படத்தில் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட சமந்தா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தாவுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus