18-ஆம் நூற்றாண்டு மன்னராக சந்தானம்… வைரலாகும் புகைப்படம்!

  • July 22, 2020 / 01:52 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘பிஸ்கோத்’-தின் ஷூட்டிங் முடிந்து விட்டது.

இந்த படத்தை பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இதில் சுவாதி முப்பாலா, தாரா அலிஷா பெர்ரி என சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளாம். இப்படத்தில் சந்தானம் பிஸ்கட் ஃபேக்டரியில் பணிபுரிந்து வருபவராக நடிக்கிறார் என்று முன்பே படக்குழு தெரிவித்திருந்தது.

தற்போது, சந்தானம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் ஒரு ஸ்டில்லை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஆர்.கண்ணன். இதில் சந்தானம் ‘ராஜசிம்ஹா’ என்ற 18-ஆம் நூற்றாண்டு மன்னராகவும் வலம் வருவாராம். இந்த மன்னர் காலத்து காட்சிகள் 30 நிமிடங்கள் படத்தில் இடம்பெறுமாம். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படமாக்கப்பட்டதாம். இது தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus