கிடப்பில் போடப்பட்ட படத்தை மீண்டும் தொடங்கும் சந்தானம்…. ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

  • September 2, 2020 / 10:30 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, சந்தானம் நடிப்பில் ‘டிக்கிலோனா, பிஸ்கோத், சர்வர் சுந்தரம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தானம் கதையின் நாயகனாக ‘மன்னவன் வந்தானடி’ என்ற படத்தில் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கி வந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒரு படம் என்றதுமே, ரசிகர்களின் எக்ஸ்பெக்டேஷன் லெவல் எகிறி விட்டது.

ஆனால், இப்படத்தின் ஷூட்டிங் 80% மட்டுமே முடிக்கப்பட்டது. பேலன்ஸ் 20% ஷூட்டிங்கை ஃபைனான்ஸ் பிரச்சனை காரணமாக எடுக்க முடியாமல் போக, இப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் முன்வந்து இப்படத்தை தான் தயாரித்து ரிலீஸ் செய்கிறேன் என்று கூறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வெகு விரைவில் பேலன்ஸ் 20% ஷூட்டிங்கை துவங்க ப்ளான் போடப்படுகிறதாம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆதிதி போஹன்கர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus