சந்தோஷ் நாராயணன் வீட்டில் வெள்ள நீர் புகுந்து உள்ளது !

  • November 12, 2022 / 03:30 PM IST

தமிழ் சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார் சந்தோஷ் நாராயணன் . இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆடி போனா ஆவணி ‘ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார் . இவரது இசைக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

சாந்தோஷ் நாராயணன் இசையில் இந்த ஆண்டு கடைசி விவசாயி , மகான் , குளு குளு உள்ளிட்ட படங்கள் வெளியானது . தற்போது இவரது இசையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார் . இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது . இந்த பாடலை வடிவேலு பாடி உள்ளார் .

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் ” எங்கள் வீட்டின் முன் 2 அடி தண்ணீர். 3 மணி நேரத்திற்கு முன் இருக்கிறது மேலும் எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது . நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்

சென்னையில் கடுமையான மழை சில நாட்களாக பெய்து வருகிறது . இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது மேலும் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus