‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் பிரேக் … ஐஸ்வர்யா ராயை சந்தித்த சரத்குமார் குடும்பத்தினர்!

  • July 26, 2021 / 02:07 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் ப்ளான் போட்டுள்ளதாகவும், முதல் பாகம் அடுத்த ஆண்டு (2022) ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் பிரேக்கில் நடிகர் சரத்குமாரின் குடும்பத்தினர், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சனை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸை வரலக்ஷ்மி சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

1

2

3

4

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus