விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் சரத்குமார் வெப்சீரிஸ்!

  • July 15, 2020 / 11:13 PM IST

1986 ஆம் வருடம் வெளிவந்த தெலுங்கு படமான “சமஜம்லோ” மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் சரத்குமார், தனது ஆரம்ப காலகட்டங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

1980களில் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், 1992 ஆம் வருடத்திற்கு பிறகு வெளிவந்த படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

இவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திவந்தார். சூரியன், சூரிய வம்சம், நாட்டாமை, நட்புக்காக போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் இன்றும் பல வெற்றி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லாக்டோன் காரணமாக பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி பெரிய நடிகர் நடிகைகளும் வெப்சீரிஸில் நடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இந்த வரிசையில் நடிகர் பிரசன்னா, காயத்ரி, பூர்ணா, சுனைனா, அக்ஷரா ஹாசன் ஆகியோர் ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்துள்ள நிலையில், தமன்னா, விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் விரைவில் நடிக்கவுள்ளார்கள்.

தற்போது புதிய செய்தி என்னவென்றால் நடிகர் சரத்குமார் “பேர்ட்ஸ் அப் பிரே” என்று ஓடிடி வெப்சீரிஸில் விரைவில் நடிக்கவுள்ளார். இந்த வெப்சீரிஸின் கதை அர்ச்சனா சரத் எழுதிய ஒரு நாவலைத் தழுவி எழுத்தப்பட்டுள்ளது. இதை பற்றிய இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று வட்டாரம் தெரிவிக்கிறது.இதன்மூலம் சரத்குமார் தனது முதல் ஓடிடி ரிலீஸை தரவுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus