‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’வை தொடர்ந்து… தனுஷ் – செல்வராகவன் காம்போவில் புதிய படம்!

  • January 21, 2021 / 05:45 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் ‘நானே வருவேன்’ படத்துக்கான படப்பிடிப்பு கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகும் இன்னொரு படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பார்ட் 2 (A02). 2010-ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ முதல் பாகத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

AO2 படத்தை 2024-ஆம் ஆண்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், செல்வராகவன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “தனுஷும், நானும் சேர்ந்து பண்ணும் ‘நானே வருவேன்’ படம் முடிந்த பிறகு ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ப்ளான் போட்டுள்ளோம். அதன் பிறகே ‘AO2’ படத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்படும்” என்று கூறியுள்ளார். மெகா ஹிட்டான ‘புதுப்பேட்டை’ முதல் பாகத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus