செல்வராகவன் வெளியிட்டுள்ள தனது அடுத்த படத்தின் அப்டேட்!

  • January 5, 2021 / 03:14 PM IST

2003 ஆம் ஆண்டு வெளியான “காதல்கொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். அதற்கு முன் “துள்ளுவதோ இளமை” படத்தின் கதையை இவர்தான் எழுதியிருந்தார்.

இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. பின் இவர் இயக்கத்தில் வெளியான “இரண்டாம் உலகம்” திரைப்படம் வித்தியாசமான கதை களத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.

கடைசியாக இவர் சூர்யா நடிப்பில் “என்ஜிகே” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இவர் மீண்டும் தனுஷுடன் இணைந்து #S12 படத்தில் பணிபுரிய உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்தியை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதற்கான பரபரப்பு நிகழ்ந்து வரும் இந்த நேரத்தில், இந்தப் படத்தின் அறிவிப்பு ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus