கடவுளை பற்றி செல்வராகவன் போட்ட பதிவு !

  • December 9, 2022 / 12:06 AM IST

காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி , ஆயிரத்தில் ஒருவன் , புதுப்பேட்டை போன்ற ரசிகர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன் . சாணி காகிதம் , பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் மூலம் தற்போது நடிகனாகவும் அவதாரம் எடுத்து உள்ளார் . மோகன் .ஜி .இயக்கத்தில் பகாசூரன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் .

செல்வராகவன் அடுத்து புதுப்பேட்டை 2 , ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது . இன்னும் இவர் எந்த பபடத்தை இயக்குவார் என்று இதுவரை அறிவிப்பு வரவில்லை .

இது ஒரு பக்கம் இருக்க செல்வராகவன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் ” ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து” தான்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus