எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக இயக்குநர் செல்வராகவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

  • December 17, 2022 / 12:26 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இப்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘பீஸ்ட்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘சாணிக் காயிதம்’ ஆகிய இரண்டு படங்களிலும் செல்வராகவனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘பகாசூரன்’. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார். மிக விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2021) வெளியான படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இதில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருந்தார்.

மேலும், மிக முக்கிய ரோலில் ரெஜினா நடித்திருந்தார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக இயக்குநர் செல்வராகவன் ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus