“உங்களை எதுவும் சொல்லக் கூடாதா?”… பாலாஜி – அனிதா இடையே ஏற்பட்ட மோதலால் அழுத ஷிவானி!

  • December 24, 2020 / 06:45 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் அனிதா சம்பத் “நான் பாலாஜியை சொல்றேன். captaincy-ல கொஞ்சம் flaws இருந்த மாதிரி இருந்துச்சு. ஒரே ஒரு இடத்துல partiality பார்த்த மாதிரி feel ஆச்சு” என்று சொல்கிறார். அதற்கு பாலாஜி “என்ன flaws?” என்று கேட்கிறார்.

பின், அனிதா “நீங்க கேபியும், சோமும் தூங்குனா, frank-ஆ ஆமா கேபி – சோம தூங்குனாங்கன்னு சொன்னீங்க. ஷிவானி தூங்குனதை மட்டும் நீங்க சொல்லல” என்று சொல்கிறார். அதற்கு பாலாஜி “நான் சொன்னேன்ல” என்று மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் சொல்கிறார். பின், அனிதா “நான் தான் இங்க நாமினேட் பண்ணிட்டு இருக்கேன். so, நான் என்ன feel பண்றனோ, அதான் நான் இங்க பேச முடியும். நாமினேட் பண்ணும்போது interrupt பண்ணாதீங்க” என்று சொல்கிறார்.

அதற்கு பாலாஜி “இல்ல நான் திருப்பி சொல்றேன். பொய் சொன்னா எடுத்து சொல்லலாம்” என்று சொல்லி முடிப்பதற்குள் அனிதா “நாமினேட் பண்ணும்போது interrupt பண்ணாதீங்க பாலாஜி. நீங்கதான் என்கிட்ட சொன்னீங்க, நாமினேட் பண்ணும்போது யாரும் பேசாதீங்கன்னு” என்று சொல்கிறார். அதன் பிறகு பாலாஜி “நீங்க பொய் சொல்லும்போது அதை நான் எடுத்து சொல்லணும்ல” என்று சொல்கிறார். அதற்கு அனிதா “பொய்யெல்லாம் சொல்லல. உங்களை மட்டும் எதுவுமே சொல்லக் கூடாதா பாலாஜி? நீங்க மட்டும் எல்லாரோட பேரையும் சொல்லுவீங்க. உங்களை எதுவும் சொல்லக் கூடாதா?” என்று சொல்கிறார். இதனைத் தொடர்ந்து ஷிவானி நாராயணன் அழுது கொண்டிருக்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus