‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

  • October 8, 2020 / 10:42 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் பற்றிய விவரம் இதோ…

1.நடிகர் ரியோ ராஜ் :

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் : கல்லூரி சாலை’ சீரியல் மூலம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதன் பிறகு சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின், விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3-யில் ஹீரோவாக வலம் வந்தார். அப்படியே விஜய் டிவியில் சில ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த ரியோவை ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா. இந்த படத்துக்கு பிறகு ரியோ ராஜ் நடித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. 2017-ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரியோ. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த சூழ்நிலையில் ரியோ ராஜுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

2.நடிகை சனம் ஷெட்டி :

சனம் ஷெட்டி தமிழில் அறிமுகமான முதல் படமே ‘அம்புலி’. அதன் பிறகு சனம் ஷெட்டியின் கால்ஷீட் டைரியில் ‘கதம் கதம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, சதுரம் 2, வால்டர்’ என படங்கள் குவிந்தது. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடந்த ‘பிக் பாஸ்’ சீசன் 3-யில் கலந்து கொண்ட நடிகர் தர்ஷன் – சனம் ஷெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இப்போது சனம் ஷெட்டிக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

3.நடிகை ரேகா :

ரேகா தமிழில் அறிமுகமான முதல் படமே ‘கடலோரக் கவிதைகள்’. அந்த படம் சூப்பர் ஹிட்டானதும் இவரின் கால்ஷீட் டைரியில் ‘புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, இனி ஒரு சுதந்திரம், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கதாநாயகன், ராசாவே உன்னை நம்பி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், சிகரம், குணா’ என படங்கள் குவிந்தது. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 1996-ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரேகா. இவர்களுக்கு அனுஷா என்ற மகள் உள்ளார். ஆரம்பத்தில் ஹீரோயினாக வலம் வந்த ரேகா இப்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் ரேகாவுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

4.மாடல் பாலாஜி முருகதாஸ் :

பிரபல மாடலான பாலாஜி முருகதாஸ், மிஸ்டர் இண்டர்நேஷனல், மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டவர். இவர் சினிமாவிலும் கால் பதிக்க ஆசைப்பட்டு, ‘டைசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளாராம். இந்த படம் சில காரணங்களால் இதுவரை வெளியாகவே இல்லை. இதனைத் தொடர்ந்து ‘கரோலின் காமாட்சி’ என்ற ‘ஜீ 5’ வெப் சீரிஸில் நடித்தார் பாலாஜி முருகதாஸ். மீனா ஹீரோயினாக நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்போது பாலாஜி முருகதாஸுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

5.செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் :

ஆரம்பத்தில் ‘நியூஸ் 7’ சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு சன் டிவியில் நியூஸ் வாசிக்க என்ட்ரியானார். அங்கு பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். அனிதா சம்பத்திற்கு சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ‘2.0, சர்கார், காப்பான்’ போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அனிதா. இப்போது அனிதா சம்பத்திற்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

6.நடிகை ஷிவானி நாராயணன் :

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

7.நடிகர் ஜித்தன் ரமேஷ் :

டாப் தயாரிப்பாளர்களில் ஒருவரான ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரியின் மகனும், பாப்புலர் நடிகர் ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ் தமிழில் அறிமுகமான முதல் படமே ‘ஜித்தன்’. இந்த படம் ஹிட்டானதும் ரமேஷின் கால்ஷீட் டைரியில் ‘மது, ஜெர்ரி, நீ வேணுன்டா செல்லம், மதுரை வீரன், புலி வருது, பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஒஸ்தி, ஜித்தன் 2, ஒங்கள போடணும் சார்’ என படங்கள் குவிந்தது. 2006-ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஜித்தன் ரமேஷ். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இப்போது ஜித்தன் ரமேஷுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

8.பாடகர் வேல்முருகன் :

சினிமாவில் பாப்புலரான பின்னணி பாடகரான வேல் முருகனுக்கு முதல் வாய்ப்பு ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் தான் அமைந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘மதுரை குலுங்க குலுங்க’ பாடலை பாடி அசத்தியதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. அதன் பிறகு ‘ஆடுங்கடா மச்சான், ஒத்த சொல்லால, சங்கிலி புங்கிலி, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், வேணாம் மச்சான், போட்டது பத்தல மாப்பிளை, கொஞ்சும் கிளி, கருப்பு நிறத்தழகி’ போன்ற பல பாடல்களை பாடி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். பாடகர் வேல் முருகன், கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இப்போது பாடகர் வேல் முருகனுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus