ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவதற்காக ஸ்ரேயா கேட்ட சம்பளம்… ஷாக்கான தயாரிப்பாளர்!

  • April 28, 2023 / 07:41 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். அறிமுகமான முதல் தமிழ் படத்தில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார் ஸ்ரேயா. அந்த படம் தான் ‘எனக்கு 20 உனக்கு 18’. அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் ஸ்ரேயாவை கதையின் நாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா.

‘மழை’ ஹிட்டானதும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், RRR’ என படங்கள் குவிந்தது.

ஸ்ரேயா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2018-ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா சரண். சமீபத்தில், ஆண்ட்ரே கோஸ்சீவ் – ஸ்ரேயா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இப்போது, ஸ்ரேயா சரண் நடிப்பில் ‘மியூசிக் ஸ்கூல்’ (ஹிந்தி / தெலுங்கு), தமிழில் ‘சண்டக்காரி, நரகாசூரன்’ என 3 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா ஷங்கர்’-ல் இடம்பெறும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஸ்ரேயாவை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அணுகியிருக்கிறது. அதற்கு ஸ்ரேயா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளார் ஷாக்கானதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் ஹீரோவாக தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிரஞ்சீவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus