மீண்டும் எழுந்துள்ள சிம்பு மற்றும் திரிஷா திருமணம் குறித்த பேச்சு!

  • October 15, 2020 / 04:42 PM IST

தமிழில் பிரபல நடிகரான சிம்பு மற்றும் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் “விண்ணைத்தாண்டி வருவாயா”. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடித்தது முதல் இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தார்கள்.

சமீபத்தில் நடிகர் சிம்பு ஒரு வெளிநாட்டுப் பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்தி பரவியது. பின்பு ஒரு நேரலையில் பேசிய நடிகர் சிம்புவின் தந்தை டி.ஆர்.ராஜேந்தர், அது வெறும் வதந்தி என்றும், சிம்புவிற்கு பெண் பார்த்து வருவதாகவும் கூறினார்.

தற்போது நடிகர் சிம்பு மற்றும் திரிஷா திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக செய்தி பரவி வருகிறது. இதைப்பற்றி சிம்புவோ அல்லது திரிஷாவோ எந்தவிதமான செய்தியும் வெளியிடவில்லை. மேலும் இது தேவையில்லாத வதந்தி என்று பலரும் கூறுகிறார்கள்.

நடிகர் சிம்பு மற்றும் திரிஷா சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தில் ஒன்றாக நடித்தார்கள். இந்த குறும்படம் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் சீக்குவலாக அமைந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க எலக்ஷனில் போட்டியிட பதிவு செய்ய வந்த டி.ராஜேந்தரிடம் பலரும் சிம்பு திருமணம் குறித்தும், திரிஷாவுடன் சிம்புவுக்கு திருமணம் நடக்குமா என்று கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதிலின் மூலம் ஒரு வேளை சிம்பு மற்றும் திரிஷா திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா என்ற சந்தேகம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus