நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு!

  • January 4, 2021 / 01:38 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்த இவரின் புது லுக், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமில்லாமல், பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பழைய சிம்பு திரும்பி விட்டார் என்று இவரது ரசிகர்கள் சிம்புவின் புது லுக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள். இந்நிலையில் அவ்வப்போது இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்டேட் வந்த வண்ணம் இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலமாக ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்றது.

வேகமாக முடிவடையும் இந்த படத்தின் வேலைகளால் சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டுக்காக ஆவலாக காத்திருக்கிறார்கள்.

தற்போது இந்த படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்றும், இந்த படத்தின் வெளியீட்டுக்காக கஷ்டப்பட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus