ஓய்வு நாட்களை வித்தியாசமாக கழிக்கும் சிம்பு !

  • December 22, 2022 / 06:03 PM IST

சிலம்பரசன் தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரங்களில் ஒருவர், மேலும் சிம்புவின் அடுத்த வெளியீடு ஒபேலி என் கிருஷ்ணா இயக்கிய ‘பத்து தலை’. இந்த படம் எப்போ வெளியாகும் என்று இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சிம்பு தனது அடுத்த படத்தின் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு ஒரு மாதம் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. .

சிலம்பரசனின் ‘பத்து தலை’ படப்பிடிப்பு சில வாரத்திற்கு முன்பு முடிவடைந்தது, மேலும் படம் போஸ்ட் புரொடக்‌ஷன் நிலைக்கு வந்தது. படப்பிடிப்பு செயல்பாட்டில் தாமதம் காரணமாக டிசம்பர் மாதம் வெளிவருவதாக இருந்த படம் பின்பு ஒத்திவைக்கப்பட்டது, மேலும் படம் இப்போது மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘பத்து தல’ படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், டீஜய், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், கன்னடப் படமான ‘மப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கான பத்து தல படத்தின் இசையை ஏஆர் ரஹ்மான் கவனித்து வருகிறார்.

நடிகர் சிம்பு தற்போது விடுமுறையில் இருக்கிறார் . இந்த ஓய்வு நாட்களில் தனது திறமையை வளர்த்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்க திட்டமிட்டுள்ளார் சிம்பு என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus