நாகர்கோவில் காசி குறித்து முன்பே எச்சரித்த பாடகி சின்மயி…!

  • April 30, 2020 / 08:19 PM IST

காமவெறியன் காசி குறித்து முன்பே எச்சரித்திருந்ததாக பாடகி சின்மயி ட்வீட் போட்டுள்ளார்.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த காசி என்பவர் 70 கும் மேற்பட்ட இளம் பெண்கள், பள்ளி மாணவிகளை தனது வலையில் வீழ்த்தி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்ததாக வெளியான செய்தி தமிழகத்தையே உலுக்கியது. மேலும் அதனை வீடியோ எடுத்து காசி பாதிக்கப்பட்ட பெண்களிடம் பணம் பறித்த சம்பவம் குறித்த தகவல் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இளம் பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து குமரி போலீசார் இந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். டாக்டரிமிருந்து சுமார் ரூ.7 லட்சம் ரூபாய் வரை காசி காசு பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

காமக்கொடூரன் காசி குறித்து பிரபல பாடகி சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பல பெண்கள் இந்த காமுகன் பற்றி தன்னிடம் இதற்கு முன்பாகவே கூறியிருந்ததாகவும், நான் இவனை பற்றி ஏற்கனவே எனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதகவும் தற்போது இவன் சிறையில் உள்ளான் என்று பதிவிட்டிருந்தார். இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இவன் உங்க கிட்டையும் வேலையை காட்டிட்டானா என பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதற்கு அவர்களையும் சமாளிக்கும் விதமாக சின்மயி கமெண்ட் போட்டு வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus