கதையில் சில மாற்றத்தை சொன்ன சிவகார்த்திகேயன் !

  • July 8, 2022 / 08:58 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” எஸ்.கே 20 ” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார் .காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது சமீபத்தில் இந்த படத்திற்கு பிரின்ஸ் என்ற தலைப்பு வைத்தனர் . வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். வருகின்ற ஜூலை மாதம் 28-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தது ஆனால் தற்போது கதையில் சில மாற்றங்களை செய்ய கோரியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் . இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதம் கழித்து தொடங்கும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus