சிவகார்த்திகேயனுக்கு தன் திரைப்பட ஹீரோயினால் வந்த பிரச்சனை!

  • September 17, 2020 / 11:00 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் மட்டுமின்றி தற்போது சிவகார்த்திகேயன் “அயலான்” படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கலையரசு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “டாக்டர்” படத்தின் வேலைகள் தொடங்கி விட்டது என்று பதிவிட்டிருந்தார்.

டாக்டர் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வினை வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே முடிவடைய போகும் டாக்டர் படத்தின் ஷூட்டிஙை அடுத்து சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். ஆனால் அந்த படப்பிடிப்பில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் ரகுள் பிரீட் சிங் மூலமாக ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சமீபத்தில் சிக்கியுள்ள ரகுள் பிரீட் சிங் இந்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி குறி எழும்பி உள்ளதால் எப்போது அயலான் படத்தின் ஷூட்டிங் முடியும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சிவகார்த்திகேயன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus