‘மாநாடு’வில் எஸ்.ஜே.சூர்யா ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா?… ஏன் மிஸ் ஆச்சு தெரியுமா?

  • December 2, 2021 / 11:48 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என வெங்கட் பிரபுவின் முதல் சாய்ஸாக இருந்தது அரவிந்த் சாமி என தகவல் கிடைத்துள்ளது. அப்போது ‘தலைவி’ படத்தில் பிஸியாக நடித்து வந்ததால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அரவிந்த் சாமியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus