ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘RC15’… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான எஸ்.ஜே.சூர்யா!

  • September 11, 2022 / 11:19 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.

இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இது தயாரிப்பு நிறுவனம் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’-யின் 50-வது படைப்பாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஞ்சலி, ஜெயராம், சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைத்து வரும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 9-ஆம் தேதி) முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus