தனது கணவர் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற சௌந்தர்யா!

  • February 6, 2023 / 01:24 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா, 2014-ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கினார்.

இதில் அவரது தந்தை ரஜினிகாந்தே நடித்திருந்தார். ‘கோச்சடையான்’ படத்துக்கு பிறகு ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். 2010-யில் அஷ்வின் என்பவரை திருமணம் செய்த சௌந்தர்யா, அவரை 2017-யில் விவாகரத்து செய்துவிட்டு 2019-ஆம் ஆண்டு விஷாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே, சௌந்தர்யா – அஷ்வின் தம்பதியினருக்கு வேத் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில், விஷாகன் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு ‘வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறதாம்.

தற்போது, சௌந்தர்யா தனது கணவர் மற்றும் மகனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus