எஸ்.பி.பி.யின் பிறந்து நாளுக்கு விழா ஏற்பாடு செய்த சரண் !

  • May 25, 2022 / 09:02 PM IST

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் இந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகராக திகழ்ந்தவர் . இந்திய மொழிகளில் 50 ஆயிரம் பாடலுக்கு மேல் இவர் பாடல் பாடி உள்ளார் . ஆறு தேசிய விருதுகளையும் வென்றவர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளையும் பெற்றவர். தயாரிப்பாளர், நடிகர், என பல தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை வைத்து இருந்தார் .

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார் . இந்நிலையில் வருகின்ற ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75 வது பிறந்த நாளை அவரது மகனும், நடிகரும், பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

வருகின்ற ஜூன் 4ம் தேதி ‘எஸ்பிபி லைவ் சன்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார் . இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது . மேலும் இந்த நிகழ்ச்சி நடக்கும் இடம் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus