‘கே.ஜி.எஃப்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாரா யாஷ்?… ஸ்ரீநிதி ஷெட்டி போட்ட ட்வீட்!

  • March 21, 2023 / 05:01 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவருக்கு அமைந்த முதல் படமே மிகப் பெரிய ஹிட்டானது. அது தான் கன்னட படமான ‘கே.ஜி.எஃப்’. இப்படம் கன்னட மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் மெகா ஹிட்டானது.

இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்க, யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2 ரிலீஸானது. இதிலும் ஸ்ரீநிதி ஷெட்டி தான் ஹீரோயினாக வலம் வந்திருந்தார். இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து ‘கோப்ரா’ என்ற தமிழ் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீநிதி ஷெட்டி. இந்நிலையில், ‘கே.ஜி.எஃப்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் யாஷ் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்றும், அவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

தற்போது, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் “யாஷ் ஒரு பக்கா ஜென்டில் மேன். அவருடன் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. அவரால் எனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus