‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலம்பரசன் பட நடிகை… வைரலாகும் ஸ்டில்!

  • May 24, 2021 / 05:22 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக எட்டு மலையாள படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த மலையாள படம் தான் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’.

அதன் பிறகு தமிழ் திரையுலகிலும் என்ட்ரியானார். அதுவும் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில்.. பொதுவாகவே கெளதம் மேனனின் படங்களில் ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இருக்கும். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனின் நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது. இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை மஞ்சிமா மோகனுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது மஞ்சிமா மோகன் நடிப்பில் தமிழில் ‘FIR, துக்ளக் தர்பார்’ மற்றும் மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இன்று நடிகை மஞ்சிமா மோகன் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus