ஈஸ்வரன் படத்திற்காக நடிகர் சிம்பு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

  • August 30, 2022 / 06:14 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவுக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு சிம்பு – கௌதம் மேனன் கூட்டணி ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். எனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

இந்நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருந்தது . படத்தின் ஆடியோ லான்ச் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது . இதற்காக பெரிய செட் ஒன்று போட இருக்கிறார்கள் .மேலும் இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல் , சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது .

சிம்பு மாநாடு படத்திற்கு முன்பாக உடல் எடையை குறைத்து மீண்டும் வந்த படம் ஈஸ்வரன் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . இந்நிலையில் இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் 8 கோடி என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus