நாளை ரிலீஸாகும் சிலம்பரசனின் ‘மாநாடு’… இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா?

  • November 24, 2021 / 05:03 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீசர், 2 ட்ரெய்லர்கள் மற்றும் 2 பாடல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

படத்தை நாளை (நவம்பர் 25-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை ரூ.13 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகையால், இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus